பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சமீபத்தில் அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்தாலும் நுரையீரல் உள்ளிட்ட ஒருசில பாதிப்பு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் எஸ்பிபி உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல் தெரிவித்து வரும் அவரது மகன் எஸ்பிபி சரண் நேற்று தந்தையின் நிலை குறித்து காணொளி வெளியிட்டுள்ளார்.
குறித்த காட்சியில், ’எனது தந்தை எஸ்பிபியின் உடல்நிலை குறித்து கடந்த 10ம் தேதி தெரிவித்தேன். இந்த நிலையில் இந்த நான்கு நாட்களில் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது.
அவரது நுரையீரலிலும் முன்னேற்றம் அடைந்து இருப்பது எக்ஸ்ரே படங்களில் இருந்து தெரிய வருகிறது.
மேலும் அவர் 15 முதல் 20 நிமிடம் வரை எழுந்து உட்கார்ந்து இருக்கிறார். பிசியோதெரபி சிகிச்சை மூலம் நன்றாக தேறி வரும் தனது தந்தைக்கு பேசுவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
எனவே அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்ததற்கு ரசிகர்களின் பிரார்த்தனையே காரணம் என்பதால் மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்று எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.
Today’s update from#SPBCharan about #SPB Sir’s Health#SPbalasubramanyam pic.twitter.com/nuuCuVO9N1
— Diamond Babu (@idiamondbabu) September 14, 2020