Home > Pets & Animals > View
Published:Friday, 21 September 2012, 04:44 GMTUnder:Pets & Animals
செக் குடியரசு நாட்டில் பராகுவே நகரிலுள்ள உயிரியல் பூங்காவில் ஆசியாவை சேர்ந்த சாந்தி என்ற பெண் யானை இருக்கிறது. இந்த யானைக்கு ஓவியம் தீட்டும் பயிற்சியை பாகன் வெரோனிகா என்பவர் கற்று கொடுத்தார். இதன் பயனாக சாந்தி இதுவரையில் 12 ஓவியங்களை தீட்டியிருக்கிறது.
இந்த ஓவியங்களை கண்காட்சி அமைத்து ஏலம் விட இருக்கிறார்கள். சில ஓவியம் ரூ.1 லட்சம் வரை ஏலம் போய் இருக்கிறது. அதன் மூலம் பல லட்சம் ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இந்த பணத்தை கொண்டு யானைகளுக்கு தேவையான உபகரணங்கள் வாங்க திட்டமிட்டுள்ளார்கள்.


Back to HomePrintReport UsShare with Friends